திருச்சியில் 5-ந்தேதி டி.டி.வி. தினகரன் தலைமையில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

காலை 10 மணியளவில் திருச்சி பெமினா ஓட்டல், காவேரி அரங்கில் நடைபெற உள்ளது. கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.
திருச்சியில் 5-ந்தேதி டி.டி.வி. தினகரன் தலைமையில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Published on

சென்னை:

அ.ம.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி மாநகர் ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் வருகிற 5-ந் தேதி (ஞாயிறுக்கிழமை) காலை 10 மணியளவில் திருச்சி பெமினா ஓட்டல், காவேரி அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி மாநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com