சட்டசபை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 54 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்

தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

இதுதொடர்பாக நேற்று இரவு அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

1.கணேசமூர்த்தி-பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

2.டி.எஸ்.அன்பு- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், நெல்லை நகர போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டார்.

3. தீபக் எம்.தாமோர்- நெல்லை போலீஸ் கமிஷனராக இருந்த இவர், சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. வித்யா ஜெயந்த் குல்கர்னி- சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.யாக பணிபுரிந்த இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

5. தேன்மொழி- சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பணியில் இருந்த இவர், சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

6. கே.சங்கர்- சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யான இவர், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. பவானீஸ்வரி- சென்னை பொதுப்பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக பதவி ஏற்பார்.

8. டாக்டர் என்.கண்ணன்- சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனரான இவர், சென்னை தெற்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

9. ஆர்.தினகரன்- சென்னை தெற்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய இவர், மேற்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

10.கே.பெரியய்யா- மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பணியில் இருந்த இவர், சென்னை பொதுப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

11.சந்தோஷ்குமார்- சென்னை நிர்வாகப்பிரிவு ஐ.ஜி.யாக பணியில் இருந்த இவர், சேலம் நகர கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

12.டி.செந்தில்குமார்- சேலம் நகர கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை வடக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

13.அருண்-சென்னை வடக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய இவர், நிர்வாகப்பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

14. எஸ்.ராஜேஸ்வரி- சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், சென்னை மேற்கு மண்டல சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

15.சி.மகேஸ்வரி-சென்னை மேற்கு மண்டல சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக பணியாற்றிய இவர், தலைமையக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

16. பி.கே.செந்தில்குமாரி- சென்னை தலைமையக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

17. எஸ்.லட்சுமி-சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை தெற்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

18.ஏ.ஜி.பாபு- சென்னை தெற்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக இருந்த இவர், சென்னை நிர்வாகப்பிரிவு டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

19. ஏ.டி.துரைகுமார்- சென்னை நிர்வாகப்பிரிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், சென்னை வடக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

20. வி.பாலகிருஷ்ணன்-சென்னை வடக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனரான இவர், சென்னை கிழக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

21.ஆர்.சுதாகர்-சென்னை கிழக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனரான இவர், மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

22.எஸ்.ராஜேந்திரன்- மதுரை சரக டி.ஐ.ஜி.யான இவர், மாநில உளவுப்பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு) டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

23. எம்.பாண்டியன்- சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனரான இவர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

24. கே.எழிலரசன்- விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யான இவர், சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

25. ஆர்.கிருஷ்ணராஜ்- சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக இருந்த இவர், நெல்லை மாவட்ட சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

26. எம்.மணிவண்ணன்- நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், தூத்துக்குடி மாவட்டத்துக்கு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

27. எஸ்.ஜெயக்குமார்-தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், சென்னை பூந்தமல்லி சிறப்பு காவல் படை கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

28. வி.பாஸ்கரன்- சென்னை பூந்தமல்லி சிறப்பு காவல் படை கமாண்டராக பணியாற்றிய இவர், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

29. வி.ஆர்.ஸ்ரீனிவாசன்-அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியில் இருந்த இவர், நெல்லை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

30. எஸ்.சரவணன்-நெல்லை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பணியாற்றிய இவர், தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக பதவி ஏற்பார்.

31. ஆர்.ராமகிருஷ்ணன்- தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக பணியாற்றிய இவர், சென்னை ஐகோர்ட்டு வழக்குகள் பிரிவு உதவி ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

32. மயில்வாகனன்- ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், கோவை நகர தலைமையக துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

33. கே.குணசேகரன்- கோவை நகர தலைமையக துணை கமிஷனராக இருந்த இவர், அமலாக்கப்பிரிவு சேலம் மண்டல சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

34. டாக்டர் ஆர்.சிவகுமார்-சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக இருந்த இவர், ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

35. பாண்டியராஜன்-சென்னை வணிக குற்ற புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், நீலகிரி மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

36. சசிமோகன்- நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

37. அதிவீரபாண்டியன்- சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை தலைமையக துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

38. ராஜசேகரன்-சென்னை தலைமையக துணை கமிஷனராக பணியாற்றிய இவர், மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

39. பழனிகுமார்- மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

40. பி.ராஜன்- சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக பணியில் இருந்த இவர், திருச்சி மாவட்ட சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

41. ஜெயச்சந்திரன்- திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

42. ராஜராஜன்- மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

43. ரோகித்நாதன் ராஜகோபால்- சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

44. அசோக்குமார்- சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை மிதக்கும் காவல் படை அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

45. எஸ்.எஸ்.மகேஸ்வரன்- சென்னை மிதக்கும் காவல் படை அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

46. பி.பகலவன்- கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

47.மகேஷ்- கியூ பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

48. தீபா சத்யன்- சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

49. என்.குமார்- சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

50. வந்திதா பாண்டே-சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பணியில் இருந்த இவர், பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

51. கே.மீனா- சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

52. பி.கண்ணம்மாள்- சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றிய இவர், கியூ பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

53. ஏ.சுந்தரவதனம்-மாமல்லபுரம் உதவி சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

54. டி.சங்கரன்- சென்னை போலீஸ் அகாடமி கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், பதவி உயர்வு பெற்று சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com