எஸ்வி சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்- தமிழிசை சவுந்தரராஜன்

பெண் பத்திரிகையாளர் குறித்த கருத்துக்கு எஸ்.வி.சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என சேலம் விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
எஸ்வி சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்- தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சேலம் விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண் பத்திரிக்கையாளர்ளுக்கு எதிராக எந்த கட்சியை சேர்ந்தவர்களும் தவறான கருத்துக்களை வெளியிட்டால் அது கண்டிக்கத்தக்கது.

ஒரு பெண் பத்திரிக்கையாளர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி பேசினார். நான் உடனடியாக நடவடிக்கை எடுத்து 10 நிமிடங்களில் அந்த பதிவுகள் அழிக்கப்பட்டு வருத்தம் தெரிவிக்கப்பட்டது.


தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த கருத்துகளை தவறுதலாக பதிவு செய்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்க செயலாகும். இணையதளத்தில் வரம்பு மீறி கருத்து கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண் பத்திரிகையாளர் குறித்த கருத்துக்கு எஸ்.வி.சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com