தமிழிசை உருவப்படம்- பா. ஜனதா கொடி எரிப்பு: விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்

கடலூரில் இன்று தமிழிசை சவுந்தரராஜன் உருவப்படம் மற்றும் பாரதீய ஜனதா கொடியை விடுதலை சிறுத்தை கட்சியினர் எரித்து கோஷமிட்டனர்.
தமிழிசை உருவப்படம்- பா. ஜனதா கொடி எரிப்பு: விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்
Published on

கடலூர்:

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்ததை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடலூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாரதீய ஜனதா கட்சி கொடி மற்றும் தமிழிசை சவுந்தரராஜனின் உருப்படத்தை எரித்து கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com