டிவில்லியர்ஸ் பார்மில் இருக்கும் போது அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம் - விராட் கோலி

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி பெற்றது.
விராட் கோலி
விராட் கோலி
Published on

சென்னை:

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆகியோர் அற்புதமாக ஆடினர். டிவில்லியர்ஸ் பார்மில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம். வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் நாங்கள் 40 ரன்கள் கூடுதலாக எடுத்ததாக நினைக்கிறேன் என தெரிவித்தார்.

தோல்வி அடைந்த கொல்கத்தா கேப்டன் மோர்கன் கூறுகையில், நாங்கள் நினைத்ததை விட ஆடுகளம் நன்றாக இருந்தது. பேட்டிங்கில் இது பெங்களூரு அணிக்குரிய நாளாக அமைந்தது. சென்னை ஆடுகளம் என்னை திகைக்க வைக்கிறது. ஆடுகள தன்மையை கணிப்பது கடினமாக உள்ளது. சென்னையை விட்டு கிளம்பி இனி அடுத்த இடத்தில் விளையாட இருப்பது மகிழ்ச்சியே என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com