தேனி அருகே மூதாட்டியை தாக்கியவர் கைது

தேனி அருகே மூதாட்டியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தேனி:

தேனி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த தொந்தி என்பவர் மனைவி பாப்பா (வயது 68). இவர், சாணத்தில் எரிவரட்டி தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் (58) என்பவருக்கும் இடையே தொழில் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் பாப்பாவை தாக்கினார். இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com