தமிழில் உறுதிமொழி எடுப்பது என் கனவு- தமிழிசை சவுந்தரராஜன்

பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு என்று புதுச்சேரி துணைநிலை கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி துணைநிலை கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி துணைநிலை கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்
Published on

புதுச்சேரி துணைநிலை கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* துணைநிலை கவர்னராக இல்லாமல் மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக இருப்பேன்.

* தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டைக் குழந்தைகளை கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது.

* பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு.

* கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் குறைவாக இருப்பது வேதனையளிக்கிறது.

* கவர்னர் மற்றும் முதல்வரின் அதிகாரம் என்ன என்பது எனக்கு தெரியும். அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நகர்வுகளை மேற்கொள்வேன்.

* நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் அளித்த புகார் குறித்து ஆலோசித்து சட்டப்படி முடிவெடுப்பேன்.

* கவர்னரை மக்கள் எளிதில் சந்திக்கக்கூடிய வகையில் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுவை துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றபோது தமிழில் உறுதிமொழி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com