சிங்காரப்பேட்டை அருகே டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

சிங்காரப்பேட்டை அருகே டிரைவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கல்லாவி:

சிங்காரப்பேட்டை அருகே உள்ள விசுவாசம்பட்டியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 21). பொக்லைன் டிரைவர். சம்பவத்தன்று இவர் முசிலிகொட்டாய் பக்கமாக சென்ற போது அவரை சின்னராஜ் (64), ரமேஷ் (42), சந்தோஷ்குமார் (21) ஆகியோர் தாக்கினார்கள். அது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி சின்னராஜ், சந்தோஷ் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ரமேசை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com