காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அகமது படேல் காலமானார்.
அகமது படேல்
அகமது படேல்
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் (71), கடந்த அக்டோபர் 1-ம் தேதி கொரோனாவில் பாதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.  

அகமது படேலின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டநிலையில் அந்த பாதிப்பு மற்ற உடல் உறுப்புகளும் பரவியது. இதையடுத்து, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி  அகமது படேல் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அகமது படேல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார் என அவரது மகன் பைசல் படேல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com