அசாமில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல்- முக்கிய அம்சங்கள்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தி, இது மக்களின் தேர்தல் அறிக்கை என்றும், மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டார்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராகுல் காந்தி
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராகுல் காந்தி
Published on

கவுகாத்தி:

சட்டசபை தேர்தல் நடைபெறும் அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி இன்று வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டம் கொண்டு வரப்படும். 

* அரசு துறைகளில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும்

* ஒரு குடும்பத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்

* தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் தினசரி சம்பளம் ரூ.365 ஆக உயர்த்தப்படும்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தி, இது மக்களின் தேர்தல் அறிக்கை என்றும், மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டார்.

அசாம் மாநிலத்தில் இந்த முறை 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com