புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 381 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து 33 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 321 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 370 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com