போச்சம்பள்ளி அருகே புளிய மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

போச்சம்பள்ளி அருகே புளிய மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மரணம்
மரணம்
Published on

மத்தூர்:

போச்சம்பள்ளி தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள சுண்டகாப்பட்டியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 58), கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் அவர் வெப்பாலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள புளிய மரத்தில் ஏறி புளி பறித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பிறகு விநாயகமூர்த்தி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விநாயகமூர்த்தி இறந்தார்.

இது குறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com