

புதுடெல்லி:
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தேவையும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று 220 டன்னாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ஆக்ஸிஜன் அளவை 419 டன்னாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.