

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
பிரார்த்தனையில் பங்கேற்ற முதலமைச்சருக்கு தேவாலயம் சார்பில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் வழங்கப்பட்டது.
பின்னர் நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் கனமழையால் சேதமடைந்த குளத்தின் சுற்றுச்சுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.