ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தின் முக்கிய முடிவுகள்

ரெம்டெசிவிர் மருந்து மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும்.
முதலமைச்சர் முக ஸ்டாலின்
முதலமைச்சர் முக ஸ்டாலின்
Published on

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு;

ஊரடங்கை சரியான முறையில் அமல்படுத்தினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

ரெம்டெசிவிர் மருந்து மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும்.

மருத்துவ ஆக்சிஜன் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவம், வருவாய், காவல்துறை, உள்ளாட்சி துறைகள் இணைந்து செயல்பட வேண்டும்.

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவம், வருவாய், காவல்துறை, நகர்ப்புற துறை, ஊரக வளர்ச்சி இணைந்து செயல்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com