காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்- 3 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த வளத்தோட்டம் பாலாற்று படுக்கையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் யுவன் போலீசாருடன் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த தூசி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 47), ரமேஷ் (41), பிரகாஷ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com