அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும்.
வெயில்
வெயில்
Published on

சென்னை:

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 19-ந்தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 20-ந் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 2 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்ப நிலை 75 டிகிரியாகவும் காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com