

பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதைத் தொடர்ந்து அந்த நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் வெளிநாட்டினர் பிரான்சுக்கு சுற்றுலா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு தற்போது அறிவித்துள்ளது.
அதாவது பிரான்சுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.