ராஜபாளையத்தில் நூற்பாலையில் தீ விபத்து- ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்

ராஜபாளையத்தில் நூற்பாலையில் தீ விபத்து ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள்.
Published on

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் சிறிய நூற்பாலையை வேல்முருகன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இதில் 1000 கதிர்களைக்கொண்ட நூற்பாலை நிறுவி 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து நடத்தி வந்தார்.

நேற்று இரவு பலத்த மழை காரணமாக மாலை முதல் மின்தடை ஏற்பட்டது. நள்ளிரவில் மின்சாரம் வந்தபோது திடீரென்று தீப்பொறி ஏற்பட்டு பஞ்சு பொதியில் தீப்பற்றியது. இதில் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த போராடினார்கள்.

அதற்குள் தீ மளமளவென்று பரவி நூற்பாலை எந்திரங்கள், பஞ்சு கண்டுகள், நூல்களில் பற்றி எரிந்தன. இன்று காலை 7 மணி அளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

விருதுநகர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன், ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் நூற்பாலை எந்திரங்கள், பஞ்சு பொதி, நூல் கண்டுகள் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகி சேதமடைந்தன.

இந்த தீ விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com