கோவையில் மணல் கடத்திய டிரைவர் கைது

கோவையில் மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கோவை:

கோவை சுரங்க வருவாய்துறை அதிகாரி ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் கோவை- திருச்சி ரோடு ராவத்தூர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 யூனிட் கிரவல் மணலை எந்த ஆவணமும் இல்லாமல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரி ரமேஷ் லாரியையும் , டிரைவரையும் பிடித்து சூலூர் போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் லாரி டிரைவர் கள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com