

அந்தவகையில்தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து 75 சதவீத டோஸ்களை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.
* கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகள் தேசிய தடுப்பூசிதிட்டத்தின் தொகுப்பிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும். இவற்றை முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகளுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் போட வேண்டும்.
* 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் முன்னுரிமை பயனாளர்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.
* மக்கள் தொகை, தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பூசி பணிகளின் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கும்.
* தடுப்பூசி வீணாதல் ஒதுக்கீட்டை பாதிக்கும். அந்த வகையில் தடுப்பூசி டோஸ்கள் வீணானால் ஒதுக்கீடு குறைக்கப்படும்.
* வருமான நிலையை கருத்தில் கொள்ளாமல் அனைத்து குடிமக்களுக்கும் இலவச தடுப்பூசி பெற உரிமை உண்டு. எனினும் பணம் செலுத்த வசதி உள்ளவர்களை தனியார் ஆஸ்பத்திரியில் போட ஊக்குவிக்க வேண்டும்.
* உற்பத்தி மற்றும் புதிய தடுப்பூசிகளை உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக தடுப்பூசிகளை வழங்குவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இது அவர்களின் மாத உற்பத்தியில் 25 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும்.
* தனியார் தடுப்பூசி மையங்களில் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரானிக் வவுச்சர்களை பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்.
* பெரிய-சிறிய தனியார் மருத்துவமனைகள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையே தடுப்பூசிகளை சமமாக வினியோகிப்பதை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைகளின் கோரிக்கையை ஒருங்கிணைக்க வேண்டும்.
* தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி டோசுக்கான விலையை ஒவ்வொரு தடுப்பூசி உற்பத்தியாளரும் அறிவிக்க வேண்டும். இடையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
* தடுப்பூசிக்காக மக்கள் முன்பதிவு செய்வதற்கு மாநிலங்கள் பொதுவான சேவை மையங்கள் மற்றும் அழைப்பு மையங்களை பயன்படுத்தலாம்.