எருதுவிடும் விழாவில் மாடுமுட்டி ஒருவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே எருதுவிடும் விழாவில் மாடுமுட்டி ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

கிருஷ்ணகிரி:

பெங்களூரு விஜய்நகரை சேர்ந்த பத்மநாபன் (வயது 40) என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே வரட்டனப்பள்ளி பகுதியில் தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு நடந்த எருது விடும் விழாவை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வேகமாக ஓடி வந்த காளை ஒன்று பத்மநாபனை முட்டியது.

இதனால் கீழே விழுந்த அவரின் காலில் மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு சிக்கி சிறிது தூரம் அவரை இழுத்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த பத்மநாபன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com