வாய் பேச முடியாத மூதாட்டிக்கு ரத்தம் கொடுத்த பார்வையற்றவர்

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே வாய் பேச முடியாத மூதாட்டிக்கு ரத்தம் கொடுத்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சிவாவுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி ரத்த தான சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
வாய் பேச முடியாத மூதாட்டிக்கு ரத்தம் கொடுத்த பார்வையற்றவர்
வாய் பேச முடியாத மூதாட்டிக்கு ரத்தம் கொடுத்த பார்வையற்றவர்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 61). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் உடல் நலக்குறைவால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இவருக்கு அவசியம் ரத்தம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையறிந்த தன்னார்வலர் அமைப்பினர் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டனர். இதையடுத்து கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான செம்பட்டூர் அரசுப்பள்ளியின் ஆசிரியர் சிவா ரத்தம் அளிக்க முன்வந்தார். அவரது நண்பர் வீரமாமுனிவர் உதவியுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த சிவா ரத்தம் வழங்கினார். சிவாவுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி ரத்த தான சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com