அரசுக்கு எதிராக பாஜக போராட்டம்: சாமிநாதன் எம்எல்ஏ உள்பட பாஜக.வினர் மீது வழக்கு

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சாமிநாதன் எம்.எல்.ஏ. உள்பட பா.ஜனதாவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

புதுச்சேரி:

கோரிமேடு இந்திராகாந்தி சிலை அருகே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை தீவைத்து கொளுத்தினர்.

இதனை தடுத்த போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கொடுத்த புகாரின் பேரில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. நிர்வாகிகள் அகிலன், நிர்மல் குமார், ஏம்பலம் செல்வம், ரவிச்சந்திரன், சரவணன், தங்க விக்ரமன், கலையரசி, வடிவேலு, விக்கி, பிரபாவதி, ஜெயலட்சுமி, சோமசுந்தரம், செல்வி, தேன்மொழி, புவனேஸ்வரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com