ஆரணி அருகே மணல் கடத்தியவர் கைது

ஆரணி அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் மற்றும் அலுவலர்கள் ஆரணி - செய்யாறு நெடுஞ்சாலையில் நேற்று அலுவல் நிமித்தமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த படவேட்டான் என்பவருக்கு சொந்தமான லாரியில் மணல் கடத்தி வரப்பட்டது. அந்த லாரியை அவர்கள் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக லாரியை ஓட்டிவந்த நேத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com