

சென்னை :
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை 10 மணி அளவில் திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்.
டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பின் போது பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் மற்றும் அரசியல் நிலவரம் குறித்தும் ஆளுநர் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.