

திருமணமான அரசு பெண் ஊழியர்களுக்கு பிரசவ காலத்தில் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை வழங்கப்படுகிறது.
தமிழக அரசு 1993-ம் ஆண்டு பெண் அரசு ஊழியர்களுக்கு பிரசவ கால விடுமுறை 90 நாட்களாக இருந்தது. பின்னர் 180 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டில் இருந்து இந்த விடுமுறை 270 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. முதல் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர்களாக பணியில் சேர்பவர்களுக்கு முதல் 2 வருடங்கள் பயிற்சி காலமாக கருதப்படும். அதன் பிறகே அவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். நிரந்தரமாக அரசு பெண் ஊழியர்களுக்கே இந்த பிரசவ கால விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.