தமிழகத்தில் 7780 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - சத்யபிரத சாகு பேட்டி

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும், 7780 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டடுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். #LokSabhaElectoins2019 #TamilNaduCEO #SensitiveBooths
தமிழகத்தில் 7780 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - சத்யபிரத சாகு பேட்டி
Published on

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 302 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 94 ஆயிரத்து 653 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பெண்களுக்கான தனி வாக்குச்சாவடி மையம், தொகுதிக்கு ஒன்று அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 67,720 வாக்குச்சாவடி மையங்களில் 7780 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.127.66 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.62 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.284 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 4185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை தேர்தல் அதிகாரியின் பேச்சு, வாய்பேச முடியாத மற்றும் காது கேளாதோருக்கும் புரியும் வகையில் சைகை மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElectoins2019 #TamilNaduCEO #SensitiveBooths

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com