13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு ஏன்?- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் மே 19ல் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி, மறுவாக்குப்பதிவு தொடர்பாக விளக்கம் அளித்தார். #LokSabhaElections2019 #Repoll
13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு ஏன்?- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
Published on

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து கடந்த 29ம் தேதி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினோம். அதன் அடிப்படையில் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த 13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இல்லை.

தலைமை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றுதான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. மறு வாக்குப்பதிவுக்காகவே தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com