தாளவாடி அருகே கர்நாடகா மது விற்ற வாலிபர் கைது

தாளவாடி அருகே கர்நாடகா மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தாளவாடி:

தாளவாடி பகுதியில் போலீசார் தாளவாடி சப்-இன்ஸ்பெக்டர் சின்ன சாமி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது தாளவாடி- ஒசூர் ரோட்டில் ஒரு வாலிபர் சந்தேகம்படும் படி நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் ஆசனூர் அடுத்த ஈக்கலூர் அம்பேத்கார் வீதியை சேர்ந்த பசுவராஜ் (வயது 35) என தெரிய வந்தது. மேலும் அவரிடம் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவரிடம் கர்நாடகா மது இருந்ததும், அதை அவர் விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் பசுவராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த கர்நாடக மதுவையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com