

புதுடெல்லி:
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் அவரது மகன்கள் அகிலேஷ் யாதவ், பிரதீக் யாதவ் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கின் தன்மை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து காங்கிரஸ் நிர்வாகி விஸ்வநாத் சதுர்வேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக சி.பி.ஐ. 2 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. #SC