

இதுகுறித்து ஐசிசி தலைவராக இருக்கும் ஷஷாங்க் மனோகரிடம் கருத்து கேட்டார். ஷஷாங்க மனோகர் ஏற்கனவே பிசிசிஐ தலைவராக இருந்தவர். கடிதம் மூலம் தங்களை கருத்தை தெரிவிக்க கோரினார். ஆனால் மனோகர் மறுத்துவிட்டார். இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போது ஐ.சி.சி. தலைவரிடம் ஆலோசனை கேட்கவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தார்.
ஆனால், நீங்கள் ஐ.சி.சி. தலைவரிடம் ஆலோசனை கேட்டதற்கு ஆதாரம் உள்ளது. நீங்கள் கோர்ட்டில் பொய் வாக்குமூலம் கொடுத்துள்ளீர்கள். அதனால் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். இல்லையெனில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.
இதுகுறித்து அனுராக் தாகூர் கோர்ட்டில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் சூழ்நிலையை விளக்கி மன்னிப்பு கோரியிருந்தார். இதனை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துவிட்டது.