பரிகார பூஜை செய்த சபரிமலை தந்திரிக்கு எதிராக வழக்கு- உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சபரிமலையில் பெண்கள் நுழைந்ததையடுத்து பரிகார பூஜை செய்த தந்திரிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. #SabarimalaIssue #SabarimalaTemplePriest
பரிகார பூஜை செய்த சபரிமலை தந்திரிக்கு எதிராக வழக்கு- உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Published on

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்த தந்திரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் தினேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜனவரி 22-ம் தேதி மற்ற சீராய்வு மனுக்களுடன் சேர்த்தே இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. #SabarimalaIssue #SabarimalaTemplePriest

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com