தேர்வுக்குழு ஒரு ‘நொண்டி வாத்து’: கவாஸ்கர் இப்படி சாடுவதற்கு காரணம் என்ன?

எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு ‘நொண்டி வாத்து’ என்று கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
கவாஸ்கர்
கவாஸ்கர்
Published on

உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியோடு வெளியேறியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அப்போது வீரர்களை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் கலந்து கொள்ள கேப்டன் விராட் கோலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் தேர்வுக்குழுவில் கலந்து கொண்டார்.

உலகக்கோப்பை தொடரில் இடம் பிடித்திருந்த கேஜர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் விராட் கோலி கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விராட் கோலி தேர்வுக்காக கூட்டம் கூட்டப்படாததால், தேர்வுக்குழுவை ‘நொண்டி வாத்து’ என்று கவாஸ்கர் சாடியுள்ளார்.

மிகவும் மோசமாக விளையாடிய தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி நுழையாத நிலையில் கேப்டன் மட்டும் தொடரலாம் என்பதை காட்டுகிறது இந்த வழக்கத்திற்கு மாறான நடைமுறை காட்டுகிறது.

கேப்டனாக விராட் கோலி நீடிக்கலாமா? என்பது குறித்து பேசுவதற்கு கூட்டம் கூட்டப்படாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான வீரர்களை தேர்வு செய்ய கூடியதில் இருந்து விராட் கோலி அவருடைய அணிக்கு கேப்டனா? அல்லது அவர் கேப்டனாக இருப்பதில் தேர்வு குழுவுக்கு  மகிழ்ச்சியா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com