

தூத்துக்குடி:
பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியசுவாமி ஆழ்வார் திருநகரில் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆபத்துதான். தமிழக அரசியல்வாதிகள் தமிழகத்தில் புலியாக உள்ளனர். ஆனால் அவர்கள் டெல்லி சென்றால் பூனைக்குட்டிதான். குட்கா விவகாரம் பற்றி வழக்கு கோர்ட்டில் உள்ளதால் தீர்ப்புக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
அ.தி.மு.க.வை பொறுத்த வரை சசிகலா அணி மட்டும் தான் உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.