குடியாத்தம் அருகே அரசு பஸ் வராததை கண்டித்து மாணவர்கள் மறியல்

குடியாத்தம் அருகே அரசு பஸ் சரியாக இயக்காமல் தனியார் பஸ்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறி மாணவர்கள் சாலை மறியல் செய்தனர்.
குடியாத்தம் அருகே அரசு பஸ் வராததை கண்டித்து மாணவர்கள் மறியல்
Published on

குடியாத்தம்:

குடியாத்தத்தில் இருந்து பரதராமிக்கு காலை நேரங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பஸ்பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

கடந்த சில நாட்களாக இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தனியார் பஸ்களில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.

இன்று காலை குடியாத்தம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர் கீழே விழுந்து காயமடைந்தார்.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கணவாய் மோட்டூரில் சாலை மறியல் செய்தனர்.

அரசு பஸ்களை இயக்காமல் தனியார் பஸ்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் உதவி செய்வதாக குற்றம் சாட்டினர்.

பரதராமி போலீசார் அங்கு சென்று அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com