ஸ்டெர்லைட் போராட்டம் - திருமணமான 3 மாதத்திலேயே குண்டுக்கு இரையான புதுமாப்பிள்ளை

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் புதுமாப்பிள்ளை இறந்த தகவல் அறிந்த அவரது இளம்மனைவி கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
ஸ்டெர்லைட் போராட்டம் - திருமணமான 3 மாதத்திலேயே குண்டுக்கு இரையான புதுமாப்பிள்ளை
Published on

தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று பொது மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் பலியானார்கள். இதனால் தூத்துக்குடி நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்த மணிராஜூம் (வயது 25) ஒருவர். இவர் தொடக்கத்தில் இருந்தே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று வந்தார்.

இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. நேற்று நடந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க அவர் காலையிலேயே வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார். துப்பாக்கி சூட்டில் அவர் பலியானது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

புதுமாப்பிள்ளை மணிராஜ் இறந்த தகவல் அறிந்த அவரது இளம் மனைவி கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. வாழ்க்கையை தொடங்கிய 3 மாதத்திலேயே மணிராஜின் வாழ்வு முடிந்துபோனது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com