57 அடியை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு நீர்வரத்தும் திறப்பும் இல்லை.மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
Vaigai Dam
Published on

கூடலூர்:

கேரளாவில் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 1145 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 131.75 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாய பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வைகை அணையை வந்து சேருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக உள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

கடந்த 10 நாட்களில் 2½ அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. மழை கை கொடுக்கும் பட்சத்தில் விரைவில் 57 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 1266 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு நீர்வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.96 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 0.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com