search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தல் பிரசாரம் முடிந்தபின் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை: சத்யபிரதா சாகு
    X

    தேர்தல் பிரசாரம் முடிந்தபின் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை: சத்யபிரதா சாகு

    • தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
    • தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில், தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

    பிரசாரம் நிறைவடைந்த பின், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது.

    தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது.

    தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும்.

    வாக்காளர் அல்லாதவர்கள் நாளை மாலை 6 மணிக்குள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்.

    தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் யாரும் தங்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×