

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 3 டெஸ்டில் 4 இன்னிங்சில் விளையாடி 529 ரன்கள் குவித்தார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். ராஞ்சியில் இன்றுடன் முடிவடைந்த கடைசி டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார். இரண்டு டெஸ்டிலும் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஒட்டு மொத்தமாக சிறப்பாக விளையாடியதால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.