4வது ஒருநாள் போட்டி - பாகிஸ்தானின் உஸ்மான் கான் பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்கா 164 ரன்னில் சுருண்டது

பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் உஸ்மான் கான் பந்துவீச்சில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா அணி 164 ரன்னில் சுருண்டது. #SAvPAK #Usmankhan
4வது ஒருநாள் போட்டி - பாகிஸ்தானின் உஸ்மான் கான் பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்கா 164 ரன்னில் சுருண்டது
Published on

ஜோகனஸ்பெர்க்:

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த மூன்று போட்டிகளில் 2 - 1 என தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்கில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லாவும், டி காக்கும் களமிறங்கினர்.

ஆம்லாவும் டு பிளசிசும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். ஆம்லா 59 ரன்னிலும், டு பிளசிஸ் 57 ரன்னிலும் அவுட்டாகினர்.

மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 41 ஓவரில் 164 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் கான் 4 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிதி, ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். #SAvPAK #Usmankhan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com