சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கொலை செய்யப்பட்ட எஸ்ஐ வில்சன்
கொலை செய்யப்பட்ட எஸ்ஐ வில்சன்
Published on

சென்னை:

களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ம் தேதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக தவுபீக், அப்துல் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கடந்த 21-ம் தேதி முதல் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான பரிந்துரையை தமிழக அரசு செய்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு இன்று மாற்றப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com