பாகிஸ்தானில் மழையால் 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். #PakistanRains
பாகிஸ்தானில் மழையால் 7 பேர் உயிரிழப்பு
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 38 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 238 மி.மீ அளவு மழை பெய்து பெரும் பகுதியை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, படகுகள் மூலம் மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மழை பாதிப்பால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துக்களால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு  மையம் அறிவித்துள்ளதால் மீட்புப்படையினர் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். #PakistanRains

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com