கஜா புயல் பாதிப்பு - தேனி, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக தேனி, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #GajaCyclone
கஜா புயல் பாதிப்பு - தேனி, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
Published on

தேனி:

கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில், கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com