சிபிஐ லஞ்ச விவகாரம் - புகார் கொடுத்த தொழிலதிபருக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

சிபிஐ அதிகாரி லஞ்சம் பெற்றதாக புகார் கொடுத்த ஐதராபாத் தொழிலதிபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CBIVsCBI #BriberyCase #RakeshAsthana #BusinessmanSatishSana
சிபிஐ லஞ்ச விவகாரம் - புகார் கொடுத்த தொழிலதிபருக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Published on

ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா சி.பி.ஐ.யிடம் ஒரு புகார் அளித்தார். அதில், இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறியிருந்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தேவேந்தர் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிலதிபர் சதீஷ் சனாவுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கும்படி காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேசமயம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் முன்னிலையில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற சதீஷ் சனாவின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com