சதம் அடிப்பது கோலிக்கு வாடிக்கையாகி விட்டது: டெண்டுல்கர்

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு சதம் அடிப்பது இப்போது வாடிக்கையாக போய் விட்டது என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சதம் அடிப்பது கோலிக்கு வாடிக்கையாகி விட்டது: டெண்டுல்கர்
Published on

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா): மைதானத்தில் இறங்கி, சதம் அடிப்பது கோலிக்கு இப்போது வாடிக்கையாக போய் விட்டது. ஒரு நாள் கிரிக்கெட்டில் 34-வது சதம் அடித்ததற்கு வாழ்த்துகள். தொடர்ந்து இதே போன்று ரன் குவியுங்கள்.

வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா): அணி நெருக்கடிக்குள்ளான நிலையில், மிக பக்குவமாகவும், பொறுப்புணர்வுடனும் விளையாடினார். நான் பார்த்த சிறந்த ஒரு நாள் போட்டி சதங்களில் இதுவும் ஒன்று.

சுரேஷ் ரெய்னா: இந்தியாவின் ‘ரன் எந்திரம்’ மீண்டும் ஒரு முறை சதம் அடித்துள்ளார். என்ன ஒரு அற்புதமான வீரர்.

ஜாவித் மியாண்டட் (பாகிஸ்தான்): எதிரணி பந்து வீச்சாளர்களின் பலம் மற்றும் பலவீனத்தை வெகுசீக்கிரமாவே புரிந்து கொண்டு செயல்படுகிறார், கோலி. உலகின் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, கிரிக்கெட்டில் ஒரு மேதை.

மைக்கேல் வாகன் (இங்கிலாந்து): கோலி, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது வியப்புக்குரியது. ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அவரை மிகச்சிறந்த வீரராக கருதலாமா?

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com