

ஈரான் நாட்டின் பெருந்தலைவராக கடந்த 1989-ம் ஆண்டு முதல் இருந்து வரும் அயோத்துல்லா கம்மேனி வளைகுடா நாடுகளில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார். அணு ஆயுத சோதனை உள்பட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் எதிர்ப்பை சட்டை செய்யாமல், மத்திய கிழக்கு நாடுகளில் தனி செல்வாக்குடன் செயல்பட்டு வருகிறார்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக சமீபத்தில் பொறுப்பேற்ற முகம்மது பின் சல்மான், தொடர்ச்சியான சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவரது பல நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டுகளை அள்ளிவீசி வருகின்றது.
ஈரான் பெருந்தலைவர் அயோத்துல்லா கம்மேனி
இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஈரான் முக்கிய காரணமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஈரான் பெருந்தலைவரை புதிய ஹிட்லர் எனவும் அவர் விமர்சித்தார்.