ஆடிப்பெருக்கு விழா- சேலம் மாவட்டத்தில் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை

ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். #salemcollectorrohini
ஆடிப்பெருக்கு விழா- சேலம் மாவட்டத்தில் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை
Published on

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளான தமிழ்மாதம் ஆடி-18ம் நாளை முன்னிட்டும் மற்றும் ஆடி-18 ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டும் வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர்  விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலர்கள் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர் களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக செயல்படும். 

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். #salemcollectorrohini

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com