சபரிமலை வழக்கு - சீராய்வு மனுக்கள் மீது நவம்பர் 13ல் விசாரணை நடத்துகிறது உச்ச நீதிமன்றம்

சபரிமலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீது நவம்பர் 13-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SupremeCourt
சபரிமலை வழக்கு - சீராய்வு மனுக்கள் மீது நவம்பர் 13ல் விசாரணை நடத்துகிறது உச்ச நீதிமன்றம்
Published on

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதுடன், ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களையும் தடுத்து நிறுத்தினர்.
மேலும், சபரிமலை தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பரா ஒரு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு, செவ்வாய்க்கிழமை (இன்று) முடிவு செய்வதாக தெரிவித்தது.

அதன்படி, சபரிமலை விவகாரம் தொடர்பாக மனுக்களை இன்று பரிசீலனை செய்த நீதிபதிகள், சீராய்வு மனுக்கள் மீது நவம்பர் 13-ம் தேதி மாலை 5 மணிக்கு விசாரணை நடைபெறும் என அறிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com