கோவை ரெயிலில் ரூ.69 லட்சம் ஹவாலா பணம் கடத்திய 2 பேர் கைது

கேரள மாநிலம் பாலக்காடு ரெயில்வே சந்திப்பில் போலீசார் நடத்திய சோதனையில் கோவையில் இருந்து சென்ற ரெயிலில் ரூ.69 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைதானார்கள்.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

கோவை:

கேரள மாநிலம் பாலக்காடு ரெயில்வே சந்திப்பில் ரெயில்வே போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகள், பாலக்காடு ரெயில்வே போலீசார் கூட்டாக சோதனை நடத்தினர்.

அப்போது கோவையில் இருந்து தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதில் இருந்து இறங்கிய 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது கத்தை கத்தையாக ரூ.69 லட்சம் பணம் இருந்தது. உரிய ஆவணங்கள் இன்றி பணம் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சசிகாந்த் (வயது 22), தியானேஸ் (19) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கூறும்போது, வாணியம்பாடியில் இருந்து திருச்சூருக்கு இந்த ஹவாலா பணத்தை கடத்தி வந்ததாக கூறினர். இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com